June 16, 2025 13:01:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையில் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது.

இதனால் இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.