‘லாஃப்ஸ்’ சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு நுகர்வோர் நடவடிக்கைகள் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய ‘லாஃப்ஸ்’ சிலிண்டர் ஒன்றின் விலை 363 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கமைய சந்தையில் 1,856 ரூபாவுக்கு அது விற்பனையாகவுள்ளது.
இதேவேளை 5 கிலோ நிறையுடைய சிலிண்டரின் விலை 743 ரூபா வரையில் உயர்த்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாட்டில் உள்ளூர் சந்தைகளில் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.