இலங்கையில் 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக இணையத்தில் விற்பனை செய்த விவகாரத்துடன் தொடர்புபட்ட நான்கு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
சிறுமியை விற்பனை செய்வது தொடர்பான விளம்பரங்களைப் பதிவிட்ட நான்கு இணையதளங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு முடக்கியுள்ளது.
சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 40 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை விற்பனை செய்வதுடன் தொடர்புபட்ட இணையத்தளங்களை முடக்குமாறு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பணியகம் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது.
இதனடிப்படையில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் வழங்கிய உத்தரவுக்கு அமைய இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.