July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து இலங்கை வருவோருக்கு தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளில் மாற்றம்

இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தரும் இலங்கைப் பிரஜைகளுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு வருகை தர அனுமதி வழங்கப்படுகின்றதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆனால் அவ்வாறு நாட்டுக்குள் வரும் அனைவரும் விமான நிலையத்தில் கட்டாயம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் அவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.