July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடரும் என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரனவக தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் போக்குவரத்தையும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு உள்ளே 40 வீதமான பஸ் போக்குவரத்தே இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத போக்குவரத்தில் வேலைக்காகச் செல்லும் பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தை உறுதிப்படுத்த வேண்டும் புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.