June 15, 2025 15:35:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கையெடுத்துள்ளோம்”: லிட்ரோ நிறுவனம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிலைமையை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கடந்த சில தினங்களாக நிலவிய எரிவாயு தட்டுப்பாடு இனி இருக்காது என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு தமது நிறுவனத்திடம் உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக உள்ளூர் சந்தைகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மக்கள் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.