July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொவிட் தொற்றால் காலமானார்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா காலமானார்.

கொவிட் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர், தனது 76 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.

இதேவேளை, கடந்த 31ஆம் திகதி தனிப்பட்ட காரணங்களுக்காக நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா அறிவித்த போதும், தமிழ் அரசுக் கட்சியினால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருந்தார்.