![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/Kehaliya.jpg?fit=768%2C432&ssl=1)
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீட்டுக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்’ திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீட்டுக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ‘ தொடர்பில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது விவகாரம் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த கருத்தினை அவர் முழுமையாக நிராகரித்துள்ளார். அவ்வாறு எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.