June 15, 2025 7:10:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெரும்போக விவசாயத்திற்கு சேதன உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கையின் பெரும்போக விவசாயத்திற்கு சேதன உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு சேதன உர உற்பத்தியாளர்களுக்குப் பூர்த்தி செய்ய முடியாத, பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை போட்டித்தன்மையான பெறுகை முறையைப் பின்பற்றி இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனிக்கும் தேவையான உரத் தொகையை விநியோகிப்பதற்காக சர்வதேசப் போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது.