May 31, 2025 8:41:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓய்வூதிய திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை ஓய்வூதிய திணைக்களத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், சேவைகளை பெற விரும்புவோர் 1970 என்ற இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஓய்வூதிய திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.