July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்தவருக்கு கொரோனா தொற்று

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த கே.கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் அவரது உடல் நேற்று திங்கட்கிழமை (09) கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில்,அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.