June 16, 2025 20:00:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது

ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மலையக சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர்கள் பிணை மனுவொன்றை முன்வைத்திருந்தனர்.

குறித்த மனுவை நிராகரித்த நீதவான், இவர்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.