July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெடிமருந்து திருடிய விமானப் படை உறுப்பினர்கள் நால்வர் கைது!

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான கட்டுநாயக்க பகுதியிலுள்ள வெடிபொருட்கள் களஞ்சியசாலையில் இருந்து வெடிமருந்தை திருடிய சம்பவம் தொடர்பில் விமானப் படையை சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படையின் ஒழுக்காற்றுப் பிரிவின் பணிப்பாளரினால் செய்யப்பட்ட முறைப்பட்டிற்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த களஞ்சியசாலையில் இருந்து ‘அமொனியா நைட்ரேட்’ என்ற வெடி மருந்தை இவர்கள் திருடியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி அந்த களஞ்சியத்திற்கு பொறுப்பான இருந்த அதிகாரி உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ள பொலிஸார், திருடப்பட்டதாக கூறப்படும் 70 கிலோ அமொனியா நைட்ரேட் வெடி மருந்துடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் களனி பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.