June 15, 2025 14:51:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பண்ணை பாலத்தினுள் விழுந்து காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்!

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் நேற்று தவறி விழுந்து காணாமற்போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய வி.கௌதமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்ணை பாலத்தடியில் நேற்று மாலை தனது இரு நண்பர்களுடன் பாலத்தில் நின்று செல்பி புகைப்படம் எடுத்த போது இவர் தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாலத்தில் இருந்து வீழ்ந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடாத்தி இருந்தனர்.

இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிவான் வருகைதந்து விசாரணை நடத்தியதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.