
அமெரிக்காவில் இருந்து மேலும் ஒருதொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவை பாதுகாப்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை இதற்கு முன்னர் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் ‘பைசர்’ தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.