July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அனைத்து வித விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 07, 2021 வரை 30 நாட்களுக்கு அனைத்து வித வீசாக்களும் செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நீடிக்கப்படும் காலத்துக்கான விசா கட்டணம் மட்டுமே அறிவிடப்படும் எனவும் அதிகப்படியான அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த திகதிக்கு முன்பாக விசாவை நீட்டிப்பது தொடர்பான மேலதிக விபரங்களை பெற, வேலை நேரங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை 070 710 1050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என பணியகம் கூறியுள்ளது.