October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டியில் இருந்து கொழும்பு வரை செல்லும் ஆசிரியர்களின் எதிர்ப்புப் பேரணி இடைநிறுத்தப்பட்டது

கண்டியில் இருந்து கொழும்பு வரை செல்லும் ஆசிரியர்களின் எதிர்ப்புப் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நடை பயணத்தை இடைநிறுத்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதனடிப்படையில், பேரணி பஸ்யால பிரதேசத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு கோரி, கண்டியில் இருந்து கொழும்பு வரையான நடை பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

கொரோனா பரவலை சுட்டிக்காட்டி, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுமாறு ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொண்டடிருந்தனர்.