![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/223475076_1041657629937791_4263435381189337793_n-e1628319388586.jpg?fit=552%2C346&ssl=1)
புதிதாக பல்கலைக்கழக அந்தஸ்த்தைப் பெற்ற வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரும் வரை பிற்போடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், அண்மையில் தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது.
இந்நிலையில், அதன் ஆரம்ப விழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ள இருந்தார்.
எனினும், நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், இந்த நிகழ்வும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.