October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்கமுவ பிரதேச வீடொன்றில் 10 வயது சிறுவன் உட்பட மூவரின் சடலங்கள் மீட்பு

file photo

இலங்கையின் கல்கமுவ, மஹனான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உட்பட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 28 வயது பெண் ஒருவரும், அவரது 10 வயது மகனும் காதலனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயது பெண்ணின் காதலன் பெண்ணையும் மகனையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைகள் தொடர்பான மேலதிக பரிசோதனைகளை கல்கமுவ நீதவான் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.