May 31, 2025 15:59:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத் தொகுதி முற்றாக முடக்கம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கு கடந்த வாரமும், இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தையடுத்து அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளில் பல்கலைக்கழகத்தை சேரந்த பீடாதிபதிகள் உட்பட சுமார் 60 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.