July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்கப் போராட்டங்களை தீவிரப்படுத்த தயராகும் ஆசிரியர்கள்!

ஆதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வரும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி தமது போராட்டங்களுக்கு அரச துறையை சேர்ந்த மற்றைய தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அந்த தொழிற்சங்களுடன் ஆசிரியர் சங்கங்கள் விசேட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் போதும், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை முன்வைப்பதில்லை என்றும், இதனால் தீர்வு கிடைக்கும் வரையில் தங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடரும் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.