![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-26-at-10.01.46-AM.jpeg?fit=1024%2C682&ssl=1)
சீனாவில் இருந்து மேலும் ஒருதொகை ‘சினோபார்ம்’ கொவிட் தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்தடைந்தன.
இரண்டு மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
‘சினோபார்ம்’ தடுப்பூசியை முதலாவது டோஸாக பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்காக இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் ஒரு கோடியே 7 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வரையிலானோர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதுடன், 26 இலட்சத்து 79 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.