July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே பொறுப்பு’

ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது.அதற்கு அரசாங்கம் நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசாங்கம் துரத்திக் கொண்டு திரிகின்றது. அவருக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியை கையாள சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குழு ஊடாக ஆசிரியர் சம்பள பிரச்சினைகளை தீர்க்கும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் அறிக்கையையும் கல்வி அமைச்சே உருவாக்கியிருந்தது.

ஆகவே சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே ஆசிரியர் சங்கங்கள் கேட்கின்றன.இந்த நாட்டின் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் வைத்துள்ளனர்.இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே. இதுதான் ஆசியாவின் ஆச்சரியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.