
இலங்கையில் மேலும் 94 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் இதுவரை பதிவான அதி கூடிய தினசரி கொவிட் உயிரிழப்பு இதுவாகும்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 250 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று (05)மாலை 6 மணி வரை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,885 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 20,640 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 29,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 86,365 ஆக உயர்வடைந்துள்ளது.