July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களுக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஒவ்வொருவம் தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வாகன பேரணியின் போது பொலிஸார் கைப்பற்றிய வாகனங்களையும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வாகன பேரணி ஒன்றை மேற்கொண்ட போதே, இவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளும் எதிர்மறையானதாக அமைந்துள்ளன.