July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்க்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுப்பு!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சென்றுள்ளார்.

ஆசிரியர்களைப் பார்வையிட கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இடையூறு விளைவித்ததாகவும், இது தமது சிறப்புரிமை மீறலாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தனது சிறப்புரிமை மீறப்பட்டது தொடர்பில் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

This slideshow requires JavaScript.