July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா நோயாளர்களால் நிரம்பியது ராகம போதனா மருத்துவமனை!

ராகம போதனா மருத்துவமனையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் படுக்கை திறன் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்களினால் நிரம்பிவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகம மருத்துவமனையில் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 26 மற்றும் 30 வது வார்டுகளே இவ்வாறு நிரம்பியுள்ளன.

இவர்களில் ஒட்சிசன் தேவையுடைய நோயளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கடந்த சில தினங்களாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 72,541 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் பல கொரோனா வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 27,025 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.