July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார பரிசோதகரை தாக்கியதோடு அவர் மீது உமிழ்ந்த நபர் கைது!

கிரியுல்ல பகுதியில் சுகாதார பரிசோதகரை தாக்கியதோடு, அவர் மீது உமிழ்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளானவரின் வீட்டுக்கு சுகாதார பரிசோதகர் சென்றிருந்த போது குடிபோதையிலிருந்த அவரின் தந்தை இவ்வாறு சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பவத்தையடுத்து 48 வயது சந்தேக நபர் கிரியுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் பண்டாரகம- அடுலுகம பிரதேசத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு சுகாதாரப் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் எச்சரிக்கை விடுத்தார்.