![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/Gota-e1605795385394.jpg?fit=950%2C633&ssl=1)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து, 10.30 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் சென்று சபை நடவடிக்கைகளை அவதானித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று தனியார் ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 10,000 ரூபாவில் இருந்து 12,500 ரூபா வரையில் அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது.
அது தொடர்பான சட்டமூலத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்தார்.
இதன்போது சிறிது நேரம் சபை நடவடிக்கைகளை அவதானித்த ஜனாதிபதி பின்னர் அங்கிருந்து சென்றார்.