May 25, 2025 14:30:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான பயணத் தடையைத் தளர்த்தியது துபாய்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீதான பயணத் தடையை துபாய் தளர்த்தியுள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து துபாய் சில நாடுகளின் பயணிகள் மீது தற்காலிக பயணத் தடையை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பயணத்துக்கு தகுதி பெற்ற பயணிகள் நாளை முதல் துபாய்க்கு அல்லது துபாயின் ஊடாக வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் பயணிப்பதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் துபாய் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.