
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை நாளைய தினத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்தில் அந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்து, அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
நாளைய தினத்தில் அரசாங்கம் அந்த சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துமா? என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது அரசாங்கத்திடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இந்த சட்டமூலம் தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதனால் இந்த சட்டமூலம் மீதான விவாதத்தை வேறு தினமொன்றில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.