June 12, 2025 12:03:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகனப் பேரணியாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆசிரியர்கள் திட்டம்!

தமது சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலிறுத்தி அதிபர், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலிலும் தீர்வுகள் கிடைக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றைய தினத்தில் கொழும்பு நோக்கி வாகனப் பேரணி போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொரட்டுவ, கொட்டாவை, வெலிசர மற்றும் கடவத்த ஆகிய 4 வீதிகளின் ஊடாக கொழும்பு நகருக்குள் வாகனப் பேரணிகள் நுழையும் என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.