![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/iusf.jpg?fit=681%2C396&ssl=1)
முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில்கு அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராஜகிரியவில் இருந்து பாராளுமன்றம் நோக்கி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பொலிஸார் வீதித் தடைகளை போட்டு தடுத்து நிறுத்திய போது, பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குறித்த இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.