![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/covid-2.jpg?fit=800%2C494&ssl=1)
நாட்டின் கொவிட் -19 வைரஸ் நிலைமைகள் தொடர்பான உண்மையான தகவல்களின் அறிக்கையொன்றை ஒவ்வொரு பாராளுமன்ற வாரத்திலும் சுகாதார அமைச்சரால் முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க சபையில் யோசனை ஒன்றினை முன்வைத்தார்.
ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் புதிய நடைமுறை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.என்னவென்றால்,சுகாதார அமைச்சரோ அல்லது பிரதமரோ ஒவ்வொரு பாராளுமன்ற வாரத்திலும் நாட்டின் கொவிட் நிலைமைகள் குறித்த அறிவிப்பொன்றை விடுக்கின்றனர்.
எமது பாராளுமன்றத்திலும் ஒவ்வொரு பாராளுமன்ற வாரத்திலும் சுகாதார அமைச்சர் எமது நாட்டின் கொவிட் நிலைமைகளை தெளிவுபடுத்த முடியுமா என கேள்வி எழுப்பிய அவர்,
இப்போதும் கொவிட் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
ஆகவே திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டம் முடிந்து செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்தால் எம்மாலும் இங்கு கேள்விகளை கேட்க முடியும் என நினைக்கிறேன் என்றார்.