June 11, 2025 6:01:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களின் பேரணியால் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியின்மை!

பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இராஜகிரியவில் இருந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இதன்போது மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டது.

இதனால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது.