
ஆளுங்கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சட்டமூலத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறான சூழ்ந்நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இன்றைய கூட்டத்தில் இந்த சட்டமூலம் தொடர்பில் தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.