July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து கல்வி சார் ஊழியர்களும் பணிக்கு திரும்புமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு!

அனைத்து கல்வி சார் ஊழியர்களும் நாளை (2) முதல் பணிக்கு சமுகம் அளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களும் நாளைமுதல் பணிக்கு சமூகமளிக்கும்படி, ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி நாளை (02) முதல் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அனைத்து கல்வி சார் ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.