October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் அலுவலக தலைமை அதிகாரியாக யோஷித ராஜபக்‌ஷ நியமனம்

மகிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகனாகிய யோஷித ராஜபக்‌ஷ, பிரதமர் அலுவலக தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி அமைச்சரவை வழங்கியிருந்த அனுமதியின் பேரில் ஒக்டோபர் 15 ஆம் திகதி அதிகார பூர்வமாக யோஷித ராஜபக்‌ஷ பதவியேற்றுள்ளார்.

இலங்கை கடற்படை அதிகாரியாக பணியாற்றிய யோஷித கடந்த ஒக்டோபர் 10ந் திகதி கடற்படையிலிருந்து இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த இவர் சுமார் 14 ஆண்டுகள் இலங்கை கடற்படை அதிகாரியாக பணியாற்றியுள்ளதுடன், கடற்படை ரக்பி அணிக்கும் தலைமை தாங்கியுள்ளார்.

பிரித்தானியாவின் ரோயல் கடற்படை கல்லூரியில் விசேட பயிற்சி பெற்ற யோஷித ராஜபக்‌ஷ உக்ரைனின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.