July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்குக் கடலில் படகொன்றில் இருந்து பெருமளவான கேரள கஞ்சா மீட்பு!

32 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இலங்கையின் வடக்குக் கடல் பகுதியில் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், தொண்டமானாறு முதல் மாமுனை வரையான கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது அதில் இருந்து 109 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களினால் சர்வதேச கடற்பகுதியில் வைத்து இலங்கையின் படகுக்கு மாற்றி நாட்டுக்கு எடுத்து வரும் போதே கடற்படையினரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அந்தப் படகில் இருந்த பருத்தித்துறையை சேர்ந்த இருவரை கைது செய்துள்ள கடற்படையினர், மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.