June 13, 2025 20:48:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிஷாலினிக்காக மலையகத்தில் தொடர்ந்தும் போராட்டங்கள்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி மலையகத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமி ஹிசாலினியின் பிரேத பரிசோதனை சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெற்று அவரின் உயிரிழப்புக்கு சரியான நீதி கிட்ட வேண்டும் என்றும், மலையகத்தின் எதிர்கால சிறுவர்களின் உயிர் மற்றும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று காலை நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன்படி பூண்டுலோயா தோட்ட மக்களினால் பூண்டுலோயா நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

அதேபோன்று சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் நகரிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.