July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோஷம் கழிப்பதாக கூறி பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் மாந்திரீகர் கைது!

தோஷம் கழிப்பதாக கூறி பெண்கள் இருவரிடம் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் மாந்திரீகத்தில் ஈடுபடும் ஒருவர் இலங்கையின் பதுளை, ஹாலிஎல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தோஷம் கழிப்பதற்காக குறித்த நபர் ஹலிஎல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த போது, அவர் வீட்டில் இருந்த  45 மற்றும் 19 பெண்கள் இருவரிடம் பாலியல் ரீதியில் முறைகேடாக நடந்துகொண்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுக்குள் குறித்த பெண்கள் இருவரை மாத்திரம் இருக்குமாறு கூறிவிட்டு, வீட்டில் இருந்த மற்றைய அனைவரையும் வீட்டுக்கு அருகில் உள்ள சந்தியொன்றுக்கு சென்று நிற்குமாறு அந்த நபர் கூறியுள்ளதாகவும், இதன்படி வீட்டார் அந்த சந்திக்கு சென்ற பின்னர், தோஷம் கழிக்கும் போர்வையில் அந்தப் பெண்களிடம் அவர் முறைகேடாக நடந்துகொண்டுள்ளதாக ஹாலிஎல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபரை கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.