July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – ரஷ்யா இடையே 6 வருடங்களின் பின்னர் சேவையை ஆரம்பித்த ஶ்ரீலங்கன்!

6 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

இதன்படி மொஸ்கோ நகரில் இருந்து முதலாவது ஶ்ரீலங்கன் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்தின் ஊடாக 51 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று முதல் தொடர்ந்தும் இடம்பெறும் என்று ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில காரணங்களால் இருநாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை 2015 ஆம் ஆண்டு முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.