![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/india-1.jpg?fit=960%2C537&ssl=1)
இந்தியாவுக்கு எதிரான இருபது 20 கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு ஒரு இலட்சம் டொலர் பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இருபது 20 கிரிக்கெட் தொடர் ஒன்றைக் கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை அணியின் புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடியதை ஊக்குவிப்பதற்காகவே கிரிக்கெட் சபை இவ்வாறான பணப்பரிசை அறிவித்துள்ளது.