July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிஷாலினிக்கு நீதி கோரி கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினின் மரணத்திற்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மகளிர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

This slideshow requires JavaScript.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்க்கப்பட்டது.

‘ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் – சிறுவர்களை சிதைக்கதாதீர்கள்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பினால் கல்குடா, பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

This slideshow requires JavaScript.