July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக அஜித் ரோஹன நியமனம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில், எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.