June 17, 2025 1:13:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு ஒரு விமானத்தில் 75 பயணிகளே வர முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது

இலங்கைக்கு ஒரு விமானத்தில் 75 பயணிகள் மாத்திரமே வர முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற 75 பயணிகளுடனேயே வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை விதித்திருந்தது.

இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வரும் பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்துள்ளது.