July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசித் திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு இலட்சம் பேருக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் இந்த மாவட்டத்திற்கென கிடைத்துள்ளன.

இதன்படி மாவட்டம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று காலை முதல் செயற்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியுமென்று யாழ். மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.