July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்கி கணக்குகளிடையே சட்டவிரோதமாக 6 பில்லியன் பணப் பரிமாற்றம் செய்த பெண் கைது!

சட்டவிரோதமான முறையில் வங்கிக் கணக்குகளிடையே 6 பில்லியன் ரூபாய் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களில் 5 வங்கிக் கணக்குகளிடையே சட்டவிரோதமான முறையில் இந்த பணத் தொகை பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெருமளவு பணத் தொகை போதைப் பொருள் வியாபாரத்தின் மூலம் கிடைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.