July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேரடி விவாதமொன்றுக்கு வருமாறு அமைச்சர் வீரசேகரவுக்கு ஹரின் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வருமாறு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (28)குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கியதை  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே,அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பொது மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ள அவ்வாறான விவாதம் உதவியாக அமையும் என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர தன்னைப் பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் தன்னை பொய்யாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து நேரத்தை வீணடிக்காது, விவாதத்துக்கு வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று 5 மணித்தியாலங்கள் வரை தன்னிடம் வாக்கு மூலம் பெறப்பட்டாலும், தான் பாராளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தொடர்பில் கேட்கப்படவில்லை என்றும் ஹரின் எம்.பி. தெரிவித்துள்ளார்.