July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

450 கிலோ கேரள கஞ்சாவுடன் மாதகல் கடலில் மூவர் கைது!

யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பில் 450 கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து படகொன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய கடற்படையினர் இன்று காலை குறித்தக் கடல்பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்தப் படகில் இருந்து கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் படகில் இருந்த மூவரும் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொண்டமானாறு மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.